நெல்லை: மேலப்பாளையம் ரெக்ரியேசன் கிளப் சார்பில் மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி எம்ஆர்சி பூப்பந்தாட்ட மைதானத்தில் நடந்தது. போட்டி துவக்க விழாவுக்கு பூப்பந்தாட்ட கழக மாவட்ட தலைவர் பஷீர்அலி தலைமை வகித்தார். மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், மதுரை விமான நிலைய ஓய்வுபெற்ற அதிகாரி பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பூப்பந்தாட்ட கழக துணைச் செயலாளர் வெள்ளபாண்டியன் வரவேற்றார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 13 அணிகள் பங்கேற்றன.