புனே: ‘பஞ்சாப் விவசாயிகளை வேதனைப்படுத்த வேண்டாம். பிரதமர் இந்திரா காந்தியை இழந்தது போதும்,’ என ஒன்றிய அரசை சரத் பவார் எச்சரித்துள்ளார். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியின் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்ட களத்துக்கு அருகே, கடந்த 15ம் தேதி பஞ்சாப்பை சேர்ந்த 35 வயதான லக்பீர் சிங் என்பவர், கைகள் வெட்டப்பட்டு, உடல் முழுவதும் 10க்கும் மேற்பட்ட கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘சீக்கியர்களின் புனித நூலை களங்கப்படுத்தி பேசியதற்காக அவரை கொலை செய்தேன்,’ என நிஹாங் சீக்கிய பிரிவை சேர்ந்த சரப்ஜித் சிங் என்பவர் தெரிவித்தார்.