இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் கேமரான் நாரியுடன் ஜார்ஜியா வீரர் நிகோலஸ் பாசிலாஷ்விலி மோதுகிறார். முதல் அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் (23 வயது, 39வது ரேங்க்) மோதிய நிகோலஸ் பாசிலாஷ்விலி (29 வயது, 36வது ரேங்க்) 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2வது அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை (30 வயது, 28வது ரேங்க்) எதிர்கொண்ட கேமரான் நாரி (26 வயது, 26வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார்.