குன்னூர் : தொடர் மழை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் அழுகி பொலிவிழந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2ம் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த மலர்கள் அனைத்தும் பூத்து குலுங்கியது. அவற்றை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது.