ஆதாரமில்லாமல் கைது நடவடிக்கை.! கடும் விளைவை சந்திக்க நேரிடும்: மெகபூபா முப்தி மிரட்டல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் ஆதாரமில்லாமல் மக்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதை தடுக்க ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று 700க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், ‘ காஷ்மீரில் சமீபகாலமாக நடைபெற்று வரும் கொலைகள் கவலையளிக்கிறது. இது மாநில அரசின் தோல்வியாகும். அதை மறைப்பதற்காக எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொதுமக்களை கைது செய்து வருகிறது. இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும். அதற்கான விலையை கொடுக்க வேண்டியதிருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: