ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் ஆதாரமில்லாமல் மக்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதை தடுக்க ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று 700க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.