போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக செண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். மேரிகோல்ட் என அழைக்கப்படும் செண்டுமல்லி, வீரிய ஒட்டுரக செடி 35 நாட்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்த வகை பூக்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ஆயிரம் முதல் 7 ஆயிரம் செடிகள் நட்டு வளர்க்க முடியும். ஒரு செடியில் இருந்து 2 கிலோ பூக்கள் கிடைக்கும்.