டெல்லியில் தீவிரவாத தாக்குதல் அபாயம்

புதுடெல்லி: வரும் நாட்களில் நாடு முழுவதும் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில், வரவிருக்கிற பண்டிகை காலங்களை முன்னிட்டு டெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என டெல்லி போலீசார் உளவு தகவல் அளித்துள்ளனர். அதனால், டெல்லி காவல் ஆணையாளர் ராகேஷ் ஆஸ்தானா தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உள்ளூர் குற்றவாளிகள், கும்பல்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களின் உதவியின்றி அவர்களால் தாக்குதல் நடத்த முடியாது.

ரசாயன பொருள் விற்பனை கடை, வாகன நிறுத்தங்கள், பழைய பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கார் டீலர்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுவதுடன், கண்காணிக்கப்படவும் கூடும்.  பெட்ரோல் பம்புகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கான இலக்காக கொள்ளப்படும். இதனால், வாடகைக்கு இருப்போர், பணியாளர்களை சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்றார்.

Related Stories: