புதுடெல்லி: வரும் நாட்களில் நாடு முழுவதும் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில், வரவிருக்கிற பண்டிகை காலங்களை முன்னிட்டு டெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என டெல்லி போலீசார் உளவு தகவல் அளித்துள்ளனர். அதனால், டெல்லி காவல் ஆணையாளர் ராகேஷ் ஆஸ்தானா தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உள்ளூர் குற்றவாளிகள், கும்பல்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களின் உதவியின்றி அவர்களால் தாக்குதல் நடத்த முடியாது.