லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போலீசில் ஆஜராகியுள்ளார். லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த விவசாயிகள் பேரணியில் 4 பேர் காரி ஏற்றி கொல்லப்பட்டனர். உ.பி போலீஸ் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார். உச்சநீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து விசாரணை குழு முன்பு ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார். ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பி இருந்தது. கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யாமல் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. இதையடுத்து 2வது சம்மன் அனுப்பப்பட்டதால் ஆஷிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார்.