லக்னோ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் கேரி தாக்குதலில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றார். அப்போது கைது செய்யப்பட்ட அவர் சீதாப்பூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அங்கு இருந்த துடைப்பத்தை எடுத்து, அந்த அறையை பிரியங்கா பெருக்கினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிருபர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் யோகி அளித்த பேட்டியில், `அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்,’ என்று கூறினார்.