துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மைதானத்திலேயே சிஎஸ்கே அணி வீரர் சாஹர் தனது காதலியிடம் அன்பை வெளிப்படுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் களத்திலேயே தனது காதலியிடம் மோதிரம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.