ஆடுகளத்தில் காதலை முன்மொழிந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்: சாஹரின் காதலை ஏற்று கொண்ட காதலி.. சிஎஸ்கே அணி உற்சாகம்

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மைதானத்திலேயே சிஎஸ்கே அணி வீரர் சாஹர் தனது காதலியிடம் அன்பை வெளிப்படுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் களத்திலேயே தனது காதலியிடம் மோதிரம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

சாஹரின் காதலை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியதும் சிஎஸ்கே அணியினர் கரவொலி எழுப்பி உற்சாகம் அடைந்தனர். கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் களத்திலேயே காதலியிடம் அன்பை முன்மொழிந்தது இதுவே முதல்முறை ஆகும். ரசிகர்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்திய சாஹர் தனது நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்ததும் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Stories: