புதுடெல்லி: பிரதமர் கேர் நிதியின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். கொரோனா தொற்றின்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற அபாயகரமான சூழல் ஏற்படுவதை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது. பிரதமர் கேர் நிதியின் மூலமாக இதனை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டது.