சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் மீது காவல் துறையை வைத்து பொய்யான வழக்குகளை பதிவு செய்து, அவர்களை அச்சுறுத்தலுக்கு உண்டாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தி, தேர்தல் பணிகளை செய்யவிடாமல் தடுக்கக்கூடிய முயற்சிகளிலே இறங்கி இருக்கிறது. குறிப்பாக பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் காலம் காலமாக அதிமுக கோட்டையாக இருந்து வரும் நிலையில், அவர்களை தேர்தல் பணி செய்யவிடாமல் காவல் துறையை வைத்து அச்சுறுத்தலை தந்து கொண்டிருக்கிறது திமுக அரசு.