சென்னை கொரோனா கொல்லுயிரியால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!! May 29, 2021 கொரோனா கெ ஸ்டாலின் சென்னை முதல் அமைச்சர் எம்சி. கெ ஸ்டாலின் கெ ஸ்டாலின் சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக வைப்பீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலனை பாதுகாப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிந்து உதவ மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்பு பணிப்பிரிவு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யவும், குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு அந்த தொகையை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து தற்போது கொரோனா தொற்றால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் 5 லட்ச ரூபாய் அவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்கும் இடம் வழங்கப்படும் என்றும் இக்குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதி செலவுகளை முழுமையாக அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு விடுதிகளில் இல்லாமல் பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளுக்காக 18 வயதை எட்டும் வரை மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சி சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் கண்காணிக்கப்படும். குழந்தைகளுக்கும் கொரோனாவால் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் உள்ள பெற்றோருக்கும் அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும். நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். … The post கொரோனா கொல்லுயிரியால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!! appeared first on Dinakaran.
நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்: 2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு
பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்
அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை
சென்னையில் சாலையோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு
தெற்காசியாவில் முதன்முறையாக கருப்பை புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை