பாட்னா: நவராத்திரி, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இன்று முதல் ஒடிசா மற்றும் ராஜஸ்தான் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பதை தடுப்பதற்காக, நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த வகையில் டெல்லியில் சுற்றுசுழலை பாதுகாக்கும் வகையில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கு அம்மாநில அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது.