பாஜ நிர்வாகி எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுப.வீரபாண்டியன் புகார்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளங்களில் பாஜவை சேர்ந்த எச்.ராஜா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காணொலி வெளியாகி உள்ளது. அதில் என்னை பெயர் சொல்லி குறிப்பிட்டு, ‘ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது தொடர்பாக பொய் பேசுவதால், சுப.வீரபாண்டியனின் மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது என்றும், திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் உட்கார்ந்து கொண்டு சுப.வீரபாண்டியன் பிச்சை எடுக்கிறான்’ என்றும் ஒருமையில் அவதூறாக பேசியுள்ளார். எனது நற்பெயரை கெடுக்கும் விதமாக பேசி உள்ள எச்.ராஜா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: