நெல்லை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சண்முக சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த தீபக் அரோரா என்பவரின் மனைவி பிரியா அரோராவுக்கு சொந்தமான கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தை சட்டத்திற்கு உட்பட்டு கிரையம் செய்து இடம் வாங்கப்பட்டுள்ளது. இதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை பார்க்கச் சென்ற சிலரை வேண்டுமென்றே சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் பிரியா அரோராவின் கணவரின் தூண்டுதல் பேரில் போலீசார் முறையாக விசாரிக்காமல் கைது செய்து பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்.