துபாய்: ஐபிஎல்லில் நேற்று நடந்த போட்டியில் கேகேஆரை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது. நேற்றைய வெற்றிக்கு பின் டோனி கூறுகையில், இது ஒரு நல்ல வெற்றி, சில நேரங்களில் சிறப்பாக ஆடி தோல்வி அடைகிறோம். இன்று நன்றாக ஆடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த போட்டி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும்.