வேலூர் : வேலூர் மாவட்டத்தில் விளம்பரதாரர் பெயர்களை நீக்கி காவல் நிலையங்களில் புதிய பலகை வைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் விளம்பர பலகைகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்கள் பார்வையில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல் நிலைய பெயரை தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும். காவல் நிலைய பெயர் பலகையை வைக்க காவல் நிலைய முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தார்.