தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 7 கோடி ரூபாய் செலவில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் இரவில் கண்குளிர காட்சியளிக்கின்றன. ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயிலை இரவிலும் அழகுற காட்சியளிக்கும் வகையில் தொல்லியல்துறை எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டது. சுமார் 7 கோடி ரூபாய் செலவில் 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த திட்டம் நிறைவடைந்த நிலையில் கோயிலின் விமான கோபுரம், கேரளானந்தன் கோபுரம் உள்பட அனைத்தும் மின்னொளியில் மிளிர்கின்றன.