விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட விற்பட்டு கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அவியூர் ஊராட்சியில் 1100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் தொடர்ந்து அந்த கிராமத்தினரே ஊராட்சி மன்ற தலைவர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். அந்த ஊராட்சிக்கு உட்பட்டு விற்பட்டு கிராமத்தில் குறைவான வாக்காளர்களே இருப்பதால் அவர்களால் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடிவதில்லை.