ராமநாதபுரம் : ராமநாதபுரம் மீன் சந்தையில், பத்துக்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிட்டனர். பல்வேறு கடைகளில் இருந்த கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.