புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும். ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்தாண்டு குளிர்கால அமர்வு எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, கடந்த வாரம் அனைத்து துறை செயலாளர்களுக்கும் முக்கியமான கடிதம் ஒன்றை கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் (நவம்பர் கடைசி) உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் திருத்தம் தொடர்பான அறிக்கைகளை தயார் செய்ய வேண்டும்.