திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆந்திர அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி 2வது முறையாக சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். ஆனால், அறங்காவலர் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அறங்காவலர் குழுவுக்கு ஆந்திர அரசு நேற்று முன்தினம் 28 பேரை நியமித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்த குமார், இந்தியா சிமென்ட் உரிமையாளர் என்.சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.