புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நாளை நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஆப்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த ஆப்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் தான் உள்ளன. ஆனால், உணவுகளை வழங்கும் ஓட்டல்கள் வாடிக்கையாளர்களிடம் ஜிஎஸ்டி வசூலிப்பதால், டெலிவரி ஆப்கள் தனியாக அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், நடுத்தர ஓட்டல்கள், உணவு டெலிவரி ஆப்கள் மூலமாக சப்ளை செய்யப்படும் உணவுகளுக்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்துவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.