ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், தெங்குமரஹாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனங்களில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, பல்வேறு வகை மான்கள் உள்ளிட்டவை அதிகமாக உள்ளன. இந்நிலையில் சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி, கோணமாசி கைகல் வனப்பகுதியில் நேற்று மாலை வன ஊழியர்கள் தங்களின் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குண்டஹட்டி ஹள்ளா நீரோடையை ஒட்டி பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.