மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தரை இழிவு படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ஜாவத் அக்தர் தாக்கல் செய்த மனு மீது நேற்று அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கங்கனா ரணாவத் ஆஜராகவில்லை. கங்கனாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.