இன்னும் எத்தனை நாட்கள் பதவியில் நீடிப்போம் என்பது தெரியாததால் பாஜக முதல்வர்கள் கலக்கம் : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சர்ச்சை பேச்சு!!

டெல்லி : பாஜகவின் முதல்வர்கள் தாங்கள் எத்தனை நாட்கள் அந்த பதவியில் நீடிப்போம் என்பது தெரியாது என்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நிதின் கட்கரி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சட்டப்பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உரையற்றினார்.எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அமைச்சர்கள் தாங்கள் விரும்பிய துறைகள் கிடைக்காததால் மகிழ்ச்சியாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

நல்ல துறை கிடைத்த அமைச்சர்கள் தங்களால் முதல்வர்களாக ஆக முடியவில்லை என்பதால் மகிழ்ச்சியாக இல்லை என்ற அவர், முதல்வர்கள் தாங்கள் எத்தனை நாட்களுக்கு அந்த பதவியில் நீடிப்போம் என்று தெரியாததால் அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்றார்.குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென பதவி விலகிய நிலையில், அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு பேசி இருப்பது அந்த கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மற்றும் கர்நாடகாவிலும் அண்மையில் நடந்த முதல்வர்கள் மாற்றத்தால் நிதின் கட்கரி தனது சொந்த கட்சியையே விமர்சித்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: