மும்பை: மகாராஷ்டிராவில் இரண்டு சதவீத கர்ப்பிணிகள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற அவசியத்தின் காரணமாக, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் தடுப்பூசி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாநிலத்தில் சுமார் இரண்டு சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை பொருத்தமட்டில் சுமார் 20 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர். இவர்களில், 40,700 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 1.5 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர்.