கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இந்நிலையில் நேற்றிரவு கொழும்புவில் 2வது டி20 போட்டி நடந்தது. `டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணியில் துவக்க வீரர் தினேஷ் சண்டிமால் (5) ஏமாற்றினார். குசால் பெரேரா (30), பானுகா ராஜபக்சா (20) ஓரளவுக்கு ஆறுதலாக ஆடினர். இதைத்தொடர்ந்து வந்த தனஞ்செயா டி சில்வா (4), கேப்டன் தசுன் ஷனகா (10) ஏமாற்றினர்.