பெய்ரூட்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தை தகர்த்து தாக்குதல் நடத்தினர். இதில், 3 ஆயிரம் பேர் பலியாயினர். உலகையே நடுங்க வைத்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்க ராணுவம், பாகிஸ்தானில் அதிரடியாக புகுந்து, அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்று கடலில் வீசியது. ஒசாமாவுக்குப் பின் அல்கொய்தா தலைவனாக அய்மன் அல் ஜவாஹிரி பொறுப்பேற்றான். இதற்கிடையே, அல்கொய்தாவை மிஞ்சி ஐஎஸ் அமைப்பு கொடூர தீவிரவாத அமைப்பாக வளர்ச்சி கண்டது. அல்கொய்தா தலைவன் ஜவாஹிரி கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக கருதப்பட்டது.