மாஸ்கோ: ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்பட பத்திரிகையாளர் மலை உச்சியில் இருந்து தவறி விழும்போது அவரை காப்பாற்ற அங்கிருந்து குதித்த ரஷ்ய பேரிடர் துறை அமைச்சர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அவசரகால அமைச்சர் எவ்ஜெனி ஜினிசெவ் தலைமையில் பனி நிறைந்த ஆர்டிக் பகுதியில் கடந்த 2 நாட்களாக பேரிடர் பயிற்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டு வந்தன. இதில் 6,000 பேர் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக கிராஸ்நோயர்ஸ்க் மாகாணத்தின் நாரில்ஸ்க் நகரில் நேற்று பயிற்சி நடந்தது.