நடிகையிடம் கொள்ளை

மும்பை: பாலிவுட் நடிகையும், மாடலுமான அலங்கிரிதா சஹாய் (27), மும்பை சண்டிகர் பகுதியில் வாடகை குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த 7ம் தேதி பிற்பகல், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவரது வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டினர். பிறகு, அவரிடம் இருந்து நகை மற்றும் 6.50 லட்ச ரூபாய் ரொக்கத்தை பறித்துக்கொண்டனர். அலங்கிரிதா சஹாயை வீட்டிலுள்ள குளியலறையில் பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், அலங்கிரிதா சஹா சத்தம் கேட்டு அவரை  குளியலறையில் இருந்து மீட்டனர். இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: