வாங்கப்பாளையம் அருகே சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர்: கரூர் வேலூர் மெயின்ரோடு வாங்கப்பாளைம் அருகே சாலையோரம் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர்-வேலூர் சாலையில் வாங்கப்பாளையம் பகுதி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வாங்கப்பாளையம் பகுதிச் சாலையோரம் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.

இதனால், கொசுக்களின் உற்பத்தி, வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, சாலையோரம் மழைநீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: