திருவள்ளூர்: ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளியில் உள்ள கிருஷ்ணா நீர்த்தேக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 198 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் வினாடிக்கு 551 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் பூண்டி நீர்தேக்கத்திற்கு தற்பொழுது வினாடிக்கு 749 கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு உயர்ந்து வருகிறது.