சென்னை: போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் நடிகை ரகுல்பிரீத் சிங்கிடம் நேற்று அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். தெலுங்கு பட உலகில் நடக்கும் பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதையடுத்து தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017ம் ஆண்டு சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.டைரக்டர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, முமைத்கான் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இந்த வழக்கில், 62 பேரிடம் விசாரணை நடைபெற்றது. மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.