கிராம அடங்கலில் தவறான தகவல் 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு, செப்.2: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் காயார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வண்டலூர் வட்டம், கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், கிராம அடங்கலில் தவறான தகவல் அளித்ததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் காயார் கிராமம், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், தாம்பரம் கோட்டம், வண்டலூர் வட்டம், கொளத்தூர்  கிராமம், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா ஆகியோர், கிராம அடங்கலில் தவறான தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாக  பணிகளில் தவறு ஏற்படுத்தியதற்காக,  ஆர்டிஓக்களின் உத்தரவின்படி, 2 கிராம நிர்வாக அலுவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories: