புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி ஊழல் நிதி மோசடி வழக்கில், மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா அமலாக்கத்துறை முன்பாக நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ருஜிரா நேற்று ஆஜராகவில்லை. இது தொடர்பாக, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சுமந்த் பிரகாஷ் ஜெயினுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.