சென்னை: தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சிகிச்சைக்குப்பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின்பு தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் செல்கிறார்.