மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் பயணம்

சென்னை: தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சிகிச்சைக்குப்பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின்பு தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் செல்கிறார்.

அப்போது, லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப்பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. துபாய் செல்லும் விஜயகாந்துடன் அவரது அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் சென்றனர். முன்னதாக அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: