சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. செவ்வாய் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் ஆவணி மாத கார்த்திகை விழாவை முன்னிட்டு கார்த்திகை மண்டபத்தில் செல்வமுத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்பு தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது காசி மடத்து அதிபர் காசி வாசி சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் உடன் இருந்தனர்.