டெல்லி : பாராலிம்பிக்ஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவீனா படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், நாளைய போட்டியில் அவர் வெற்றி பெறுவதற்கு நாடு அவருக்கு அளிக்கும் ஆதரவையும் குறிப்பிட்டுள்ளார்.பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினா பென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் பவினா பென் படேலுக்கு வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.