அம்பத்தூர்: அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அம்பத்தூர் வரதராஜபுரம் பத்மநாபன் நாயுடு தெருவை சேர்ந்தவர் அகிலன்பாலாஜி (29). இவர் பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் 12 வயது சிறுமி தாயுடன் வசித்து வருகிறாள். நேற்று காலை வழக்கம்போல் தாய் வேலைக்கு சென்றுவிட்டதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.