பட்டிவீரன்பட்டி: தொடர்மழையால் பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.|பட்டிவீரன்பட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு பகுதியிலிருந்து 300 அடி தூரத்தில் புல்லாவெளி அருவி அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, சில்லென்ற சீதோஷ்ணத்துடன் இந்த அருவி பார்ப்பதற்கு பசுமையாகவும், ரம்மியமாக இருக்கும். ஆனால் அருவிக்கு செல்லும் வழி ஆபத்து நிறைந்த பகுதியாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் இங்க குளிப்பதற்கு தடை உள்ளது.