இந்து மதத்தை அவமதித்த கே.டி.ராகவன் மீது வழக்கு பதிய வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் புகார்

நாகர்கோவில்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் பொறுப்பில் இருந்த கே.டி.ராகவன், பெண் ஒருவரிடம் வீடியோ காலில் அரை நிர்வாண நிலையில் நின்றவாறு பேசுவதுடன், பூஜை அறைக்குள் அமர்ந்து மிகவும் அருவருப்பான முறையில் நடந்து கொள்ளும் காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் இந்த வீடியோக்களை பார்க்க நேரிட்டுள்ளது. பூஜை அறையில் இருந்து கொண்டு ராகவன் செய்யும் இந்த செயல் இந்து மதத்துக்கு மிகப்பெரிய இழிவை ஏற்படுத்தி உள்ளது. எனவே பெண்ணிடம் மிகவும் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதுடன், இந்து மதத்தையும் இழிவுப்படுத்தும் வகையில்  செயல்பட்டுள்ள ராகவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்து மதத்தை அவமதிப்பு செய்த குற்றத்துக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.

Related Stories: