மும்பை: கடந்த திங்கள் கிழமை ராய்கட்டில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நாடு சுந்திரம் அடைந்து இது எத்தனையாவது ஆண்டு என்றே தெரியவில்லை. இதனால் பேச்சின் நடுவே பின்னால் திரும்பி உதவியாளரிடம் இது எத்தனையாவது சுதந்திர தினம் என்று கேட்டார். உதவியாளர் 75வது ஆண்டு என்று சொன்னதும் முதல்வர் தனது உரையை தொடர்ந்தார் என்றும், அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் முதல்வரின் கன்னத்தில் அறைந்திருப்பேன், என்றார். அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் சிவசேனாவினர் போராட்டத்தில் குதித்தனர்.