லீட்ஸ்: இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணி வீரர்கள், ஹெடிங்லி மைதானத்தில் பயிற்சிக்காக முகாமிட்டுள்ளனர். இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இப்போட்டிக்காக, லீட்ஸ் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதற்காக நேற்று ஹெடிங்லி மைதானத்தில் முகாமிட்டனர். பிற்பகலில் இங்கிலாந்து வீரர்களும் வலைப்பயிற்சிக்காக வந்தனர்.