சென்னை: ஆன்லைன் விளையாட்டு மோசடி பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்து அறிவுரை கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள குண்டர் சட்டத்தில் கைதானவர்களுக்கான அறிவுரை கழகத்துக்கு மதன் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் அறிவுரை கழகத்தின் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மலைசுப்பிரமணியம், மாசிலாமணி, ரகுபதி ஆகியோர் முன்பு வாதிட்டனர். அப்போது மதன், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை நான் விளையாடவில்லை.