கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் அருகே பூங்காவில் பயன்பாடற்ற நிலையில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நெரூரில் சிறுவர், சிறுமிகளின் நலன் கருதி விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் இந்த பகுதியில் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் சுற்றுச்சுவர் இல்லாதது, உபகரணங்கள் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் பயனற்ற நிலையிலேயே உள்ளது. காவிரி ஆறு, புகழ்பெற்ற கோயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெரூருக்கு மக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.