சிதம்பரம்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, சிதம்பரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின் கே.எஸ் அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி. தொகையில் மாநிலங்களின் பங்கை மாநில அரசுகளுக்கு தருவதாக மத்திய அரசு ஒத்துக்கொண்டது. தமிழகத்துக்கு அந்த தொகையை கூட தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. மாநில அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக பெட்ரோலுக்கான கலால் வரியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ரூபாய் குறைத்து இருக்கிறார்.