லெஸ் கயாஸ்: ஹைதியில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,297 ஆக அதிகரித்துள்ளது. ஹைதியில் கடந்த சனியன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றது. இந்நிலையில் மூன்றாவது நேற்று கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரது சடலங்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது.