காபூல் : ரத்த களரியை தவிர்க்கவே தலைநகர் காபூலை விட்டு வெளியேறியதாக ஆப்கன் அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.காபூலை தாலிபான்கள் சுற்றி வளைத்ததுமே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்ட அஷ்ரப் கனி, தமது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான அதிகாரிகளுடன் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஆப்கனை விட்டு வெளியேறிய பிறகு முதன் முதலில் அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தமது இருப்பிடத்தை பற்றி தெளிவுபடுத்தவில்லை.